01.01.2015 - வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு – 2014 இன் கீழ் எமது நிலையத்தில் புதிய குழாய்க் கிணறு அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.எமது நிலைய நிர்வாக உறுப்பினரும் சமாதான நீதவானுமான திரு.க.நந்தகுமாரன் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக இவ்வேலையை ஆரம்பித்து வைத்தார்.
06.09.2014 - கனடாவிலிருந்து வருகை தந்த திரு.க.கந்தையா அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு எமது நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த திருமதி.பங்கயற்செல்வி சிவகுமரன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு எமது நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வலிமேற்குப்பிரதேசசபை நடாத்திய 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சனசமூகநிலையங்களைத் தெரிவுசெய்யும் போட்டியில் எமது சனசமூகநிலையம் தனது சிறந்த செயற்பாடுகள் காரணமாக 1 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. கடந்தகாலங்களில் நடைபெற்ற போட்டிகளில் 2ஆம் இடங்களைப் பெற்று வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.