கண்டாமையை பிறப்பிடமாகவும் தொல்புரம் கிழக்கு சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மருதையா யோகராசா(யோகன்) 31.08.2011 புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற மருதையா மற்றும் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற முருகேசு மற்றும் கண்ணகைஅம்மா(கண்ணார்)தம்பதிகளின் மருமகனும் விசாலாட்சி(கிச்சி)அவர்களின் அன்புக் கணவரும் பரணிதரன்,திருவரங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் யோகேஸ்வரி,உதயகுமார்,சந்திரகுமார்,காலஞ்சென்ற உதயகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற வசந்தகுமாரி,குமாரசூரியர்,உதயகுமாரி,நந்தகுமாரி,விஜயகுமாரி,சிவகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01/09/2011 வியாழக்கிழமை மு.ப.11.00 மணிக்கு அவரது இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக வழுக்கையாறு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.