இதழாசிரியர் இதயத்திலிருந்து.....
 

  ஒரு மனிதனின் செயற்பாடுகளை வெளிப்பாடாக்குவதற்கு சஞ்சிகைகளே களமாக அமைகின்றன.அந்த வகையிலே தொல்புரம் கிழக்கு வாழ் மக்களின் ஆற்றலை வெளிக்கொணர வேண்டும் என்ற எமது நிர்வாகத்தினரின் ஆவலினால் இச் சமூகச்சுடர் முதன்முறையாக வெளியிடப்படுகின்றது.
    பல்வேறு விடயங்களைத் தாங்கி இச்சஞ்சிகை வெளிவருகின்றது. மாணவர்களதும் ஆக்கங்களை சுமந்து வரும் இச்சுடர் அவர்களின் எழுத்தாற்றலை வளர்ப்பது மட்டுமன்றி ஆளுமை விருத்திக்கும் உதவும் என்பதில் ஐயமில்லை.அத்துடன் அவர்கள் எதிர்காலத்தில் எழுத்தாளர்களாக ஒளிவீச இச் சமூகச்சுடரானது வழிவகுக்கும்.

    கன்னி வெளியீடான இச்சமூகச்சுடரை வெளியீடு செய்ய உதவிய எல்லோருக்கும் சனசமூகநிலையத்தின் சார்பாக நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
      
                                                                                                                                                        செல்வி.இ.பங்கயச்செல்வி
                                                                                                                                                                          பத்திராதிபர்

 
Make a Free Website with Yola.