வாழி! வாழி! சமூகச்சுடரே!
                 
தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பதிலே
தொல்புரமென்னும் பதியினிலே வெளிவந்த சமூகச்சுடரே!                                   
தொல்லைகள் பலவகற்றி - இப்பதியினிலே
தொடர்ந்து வர வாழி வாழி....


சாந்தியாம் சமாதானமாம் சுபீட்சமாம்
அத்தனையும் வேண்டிநிற்கும் எம்மக்கட்கு
அண்டமெங்கும் அறிவுதனைப் புகட்டி
அகிலமெங்கும் அமைதி காத்து வாழி வாழி....


மக்களின் மனங்களிலே மகிழ்ச்சியையுண்டாக்க
மாண்புடனே வந்திடு நீ சமூகச்சுடரே
மக்கள் சேவையே மகேசன் சேவையென
மாசற்ற சேவை செய்து வாழி வாழி....


                                                           ஆக்கம்              
                                                    சி.சிவநாதன்

 
Make a Free Website with Yola.