புதியதோர் சமூகம் சமைப்போம்!


         
   புதியதோர் சமூகம் சமைப்போம்!
பெண்ணை உயிரோடு வதைக்கும்
சீதனக்கொடுமையை மாய்ப்போம்!
புதியதோர் சமூகம் சமைப்போம்


தெய்வத்தில் சிறந்த தாய்மை
தணலிடை இட்டு மாய்க்கும்
சீதனப் பேயின் ஆட்டம்
அழித்திட உறுதி கொள்வோம்!


கண்ணீர்ப் புயலில் மூழ்கி
கரையின்றித் தவிக்கும் பெண்மை
அடிமை விலங்கை அகற்றி
வாழ்ந்திட வழிகள் செய்வோம்!


சமமெனக் கொள்வதாலே பெண்மை
தழைத்து இவ்வையகம் ஓங்கும்!
அறிவினில் அவர்கள் - இங்கு
அழிவிலா வாழ்வு உண்டு!

                                                                                                                                
                                                                                           செல்வி.வே.சிவரூபராணி

 
Make a Free Website with Yola.