இதழாசிரியர் இதயத்திலிருந்து........

ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு களம் அமைத்துக்கொடுப்பதில் சஞ்சிகைகள் முக்கிய இடம் பெறுகின்றன."நல்லன கற்று நற்பயன் பெற வேண்டும்" என்ற உயர் சிந்தனையின் அடிப்படையில் எமது நிர்வாகம் சமூகச்சுடர்- 2 சஞ்சிகையை வெளியிடுகின்றது.

முதலாவது சஞ்சிகையில் இடம் பெறாத விடயங்களுக்கு இச்சஞ்சிகையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.மாணவர்களினதும் புலமையாளர்களதும் ஆக்கங்கள் ஊக்கமூட்டுபவையாக அமைந்துள்ளன.ஏனையோரும் வாசகர்களாக மட்டும் இருக்காது எழுத்தாளர்களாகவும் மாற வேண்டும்.இனிவரும் சமூகச்சுடரில் உங்கள் அனைவரதும் ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

இச் சமூகச்சுடர்-2 வெளியீட்டுக்கு உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
     
                                                                                                                                                   செல்வி.இ.பங்கயச்செல்வி
                                                                                                                                                                         பத்திராதிபர்

 
Make a Free Website with Yola.