மூளாயை பிறப்பிடமாகவும் தொல்புரம் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.மகேஸ்வரி நாராயணபிள்ளை அவர்கள் 25.09.2011 ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் கனிஸ்ட மகளும் காலஞ்சென்ற துரையப்பா தங்கமுத்து தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற நாராயணபிள்ளையின் பாசமிகு மனைவியும் குசலவன்,வாசுகி,கண்ணகி,மாதவி,ரமணன் ஆகியோரின் பாசமிகு அன்னையும் நந்தினி,பாலச்சந்திரன்(அம்மு நெற்),பாலச்சந்திரம்,ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் எழில்,சேயோன்,மதுவந்தி,ராகுலன்,சயன்,சிவஜன்,மதுசன்,மாசிலன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.